பகவத் கீதை - ஆன்மீகச் சொற்பொழிவு (தமிழில்):
“வாழ்க்கை எனும் போரை வெல்லுதல் (எனக்குள் உள்ள குருக்ஷேத்ரம்)” – பாகம் 2

வழங்குபவர் YSS சன்னியாசி ஸ்வாமி சுத்தானந்த கிரி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 15, 2026

மாலை 6:30

– 7:30 மணி வரை

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

பகவத் கீதையின் ஞானத்தைப் பற்றிய எமது ஊக்கமளிக்கும் சொற்பொழிவுத் தொடரை நாங்கள் தொடரவிருப்பதால், இந்தத் தமிழ் சொற்பொழிவில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்தச் சொற்பொழிவுகள், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ‘காட் டாக்ஸ் வித் அர்ஜுனா’ என்ற பகவத் கீதை விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டது; இது அனைவராலும் நேசிக்கப்படும் மறைநூலின், மகா குருமார்களால் தெய்வீக உத்வேகமூட்டப்பட்ட மொழிபெயர்ப்பும் விரிவான விளக்கவுரையுமாகும். இந்த உரையை YSS மூத்த சந்நியாசி ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்கள் வழங்கவுள்ளார்.

இந்தச் சொற்பொழிவில், பகவத் கீதையின் முதல் அத்தியாயத்திலுள்ள 2 மற்றும் 3-வது சுலோகங்களுக்கு யோகானந்தர் அளித்த விளக்கத்திலிருந்து, எவ்வாறு முறையான தியானத்தின் மூலம் பெறப்படும் அமைதி மற்றும் விழிப்புற்ற உள்ளுணர்வின் அகஒளி மூலம் தீய பழக்கங்களை வெல்வது என்பது குறித்து ஸ்வாமி சுத்தானந்தா விளக்குவார்.

கவனத்திற்கு: இந்த உரை YSS சென்னை கேந்திராவிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்நிகழ்ச்சியை பிப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி (இந்திய நேரப்படி) வரை காணலாம்.

பகவத் கீதை குறித்த பிற உரைகள்

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய, பல பாகங்களாக அமைந்த மற்றொரு சொற்பொழிவுத் தொடரைக் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த சாத்திர விளக்க உரை பற்றி

ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியரான பரமஹம்ஸ யோகானந்தர், பகவத் கீதைக்குத் தெய்வீக உள்நோக்குத் திறனுடன் விளக்கம் அளிக்கிறார். அவரது விளக்கவுரையில், அன்றாட எண்ணங்கள் மற்றும் செயல்களின் நுட்பமான காரணங்கள் முதல் பிரபஞ்ச ஒழுங்கின் பேரமைப்பு வரை அதன் உளவியல், ஆன்மீகம் மற்றும் பரதத்துவ ஆழங்களை ஆராய்வதன் மூலம், பரமஹம்ஸர் ஆன்மாவின் முக்தியை நோக்கிய பயணத்தின் விரிவான சித்தரிப்பை வழங்குகிறார்.

கீதை கூறும் தியானம் மற்றும் சரியான செயல்பாட்டின் சமநிலைப் பாதையை தெளிவாக கோடிட்டுக் காட்டும் பரமஹம்ஸர், ஆன்மீக நேர்மை, அமைதி, எளிமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை எவ்வாறு நமக்காக உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறார். நம் விழிப்படைந்த உள்ளுணர்வின் மூலம், வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்க வேண்டிய சரியான போக்கை அறிந்துகொள்கிறோம்; இதனால் எந்தக் குறைபாடுகள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன, எந்த நேர்மறை குணங்கள் நம்மை முன்னேறச் செய்கின்றன என்பதைத் தீர்மானிக்கவும், வழியில் உள்ள இடர்களை அடையாளம் கண்டு தவிர்க்கவும் முடிகிறது.

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதா – நம் புக் ஸ்டோரில் கிடைக்கிறது!

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர