சன்னியாசிகளின் சுற்றுப் பயணங்கள் மற்றும் கிரியா தீட்சை நிகழ்வுகள்

மிகுந்த மகிழ்ச்சியுடன், 2025 ஆம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள சங்கங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் YSS சன்னியாசிகளின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். முழுமையான அட்டவணையை இங்கே காண்க.

Satsanga on Yogananda's teachings.பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம அனுபூதி போதனைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு வருகை தருகின்றனர். பரமஹம்ஸரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள், ஒய் எஸ் எஸ் யோக உத்திகளை மறுஆய்வு செய்தல், கூட்டுத் தியானங்கள், கீதம் இசைத்தல், ஆடியோ-விஷுவல் விளக்கக்காட்சிகள் மற்றும் கிரியா யோக தீட்சை நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் வார இறுதி ஏகாந்தவாச தியான நிகழ்வுகளை அவர்கள் நடத்துகிறார்கள்.

Swami Smaranananda giving a talk.சொற்பொழிவு சுற்றுப்பயணங்கள், புதியவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு ஒரு அறிமுகத்தையும், பாட மாணவர்களுக்கு ஒய் எஸ் எஸ் தியான உத்திகளில் ஆழமான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பிராந்திய ஏகாந்தவாச தியான நிகழ்வுகள் ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் குறித்த வகுப்புகள் மற்றும் கூட்டுத் தியானம் மற்றும் சத்சங்கத்திற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் பல முக்கிய அம்சங்கள் இந்த நிகழ்ச்சிகளில் உள்ளடங்கியுள்ளன, அவையாவன:

  • அன்றாட வாழ்வில் தியானத்தின் முக்கியத்துவம்
  • மேலும் இணக்கமானதொரு வாழ்க்கையை வாழ்வது எப்படி
  • வெளிப்புறத் தேவைகளுடன் உள் தேவைகளை சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளுதல்

அமைதியின் உள் கோவிலைக் கட்டுவதற்கு நம்மை ஊக்குவித்து, நமது அன்புக்குரிய குருதேவர் கூறினார்: “உங்கள் மனதின் நுழைவாயில்களுக்குப் பின்னால் உள்ள அமைதியின் கண்டுபிடிப்புக்கு என்ன மகிழ்ச்சி காத்திருக்கிறது என்று, எந்த மனித நாவினாலும் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் தியானம் செய்து அந்த சூழலை உருவாக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்பவர்கள் அற்புதமான உள் அமைதியை உணர்கிறார்கள்.” இந்த நிகழ்ச்சிகள், உண்மையான சாதகர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாட்டிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி, அக அமைதியின் மீது கவனம் செலுத்தி, அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பத்தின் அமிர்தத்தை பருக ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன.

சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஏகாந்தவாசங்கள், ஜனவரி – டிசம்பர் 2025

ஜனவரி – டிசம்பர் 2025 வரையிலான சன்னியாசிகள் சுற்றுப்பயண விவரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

மாநிலம்

தேதி

இடம்

நிகழ்ச்சி வகை

ஆந்திரப் பிரதேசம்

நவம்பர் 26

பாபட்லா

ஒரு நாள் நிகழ்ச்சி

சண்டிகர்

அக்டோபர் 31-நவம்பர் 2

சண்டிகர்

கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது

குஜராத்

நவம்பர் 28-30

சூரத்

கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது

மத்தியப் பிரதேசம்

நவம்பர் 21-23

இந்தூர்

கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது

மகாராஷ்டிரா

நவம்பர் 20

சோலாப்பூர்

ஒரு நாள் நிகழ்ச்சி


நவம்பர் 23

மிராஜ்

ஒரு நாள் நிகழ்ச்சி

ஒடிசா

நவம்பர் 21-23

பூரி

ஏகாந்த வாசம் (ஒடியா)

நவம்பர் 28-30

பூரி

ஏகாந்த வாசம் (ஆங்கிலம்)

உத்தரப் பிரதேசம்

நவம்பர் 13

சாந்த் கபீர் நகர்

ஒரு நாள் நிகழ்ச்சி

நவம்பர் 16

கான்பூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

உத்தரகண்ட்

நவம்பர் 14-16

துவாரஹாத்

ஏகாந்த வாசம் (ஆங்கிலம்)

எதிர்வரும் நிகழ்வுகள்

இதைப் பகிர