இளம் சாதகர் சங்கம் 2026
(YSS நொய்டா ஆசிரமம்)
புதன்கிழமை, அக்டோபர் 7, 2026 – ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11, 2026
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன!
பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்
யோகதா சத்சங்க சகா மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி – 834001
தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்–சனி, காலை 9:30 முதல் மாலை 4:30 வரை)
மின்னஞ்சல்: [email protected]
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — நொய்டா
பரமஹம்ச யோகானந்தர் மார்க்
B-4, செக்டர் 62
நொய்டா – 201307
கௌதம் புத்த நகர்
தொலைபேசி: +91 9899811808, +91 9899811909
மின்னஞ்சல்: [email protected]
கூகுள் மேப்ஸ் இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
நிகழ்ச்சி பற்றி
மற்றவர்களின் ஆன்மீக அதிர்வுகளின் அருகாமை, உங்களுடைய ஆன்மீக அதிர்வை உயர்த்தும் ஆற்றல் கொண்டது. ஆகவே, பிற பக்தர்களுடன் இணைந்து தியானிப்பது, உங்கள் ஆன்மிக முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவுகிறது. சுய-உணர்தலை நோக்கிய உங்கள் ஆன்மிகப் பயணத்தில் அவர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்; அதேபோல், உங்கள் முன்மாதிரியின் மூலம் நீங்களும் அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும்.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
இளம் சாதகர்களின் ஆன்மீகப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டிற்கான இளம் சாதகர் சங்கத்தை அறிவிப்பதில் YSS மகிழ்ச்சியடைகிறது. இந்நிகழ்வு 2026 அக்டோபர் 7 முதல் 11 வரை (புதன்கிழமை–ஞாயிற்றுக்கிழமை) நொய்டாவில் உள்ள யோகதா சத்சங்க சகா ஆசிரமத்தில் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அக்டோபர் 6 அன்று தங்கள் வருகையைப் பதிவு செய்து, அறிமுக நிகழ்வில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற முதல் இளம் சாதகர் சங்கத்திற்கு கிடைத்த உற்சாகமளிக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியா முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட இளம் பக்தர்களை ஒன்றிணைத்த அந்த நிகழ்ச்சியின் மூலம், ஆன்மீக தோழமைக்கான வாய்ப்புகளை YSS தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்லைன் இளம் சாதகர் தோழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதாந்திர ஆன்லைன் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு மற்றும் சண்டிகரில் பிராந்திய அளவில் இளம் சாதகர் வார இறுதி முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான சங்கம் நொய்டா ஆசிரமத்தில் நடைபெற உள்ளது.
“உணர்வுகளை ஆன்மிகமயமாக்குதல் — உறவுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த சங்கம், குறிப்பாக YSS-இன் இளம் வயது பக்தர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸரின் “எப்படி வாழ வேண்டும்” போதனைகள் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுள்ள சக சாதகர்களுடனான நல்லுறவின் மூலம், உணர்வுகளில் சமநிலையை வளர்த்துக்கொள்வதற்கும், தங்களுடைய உறவுகளில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்குமான நடைமுறை வழிகளைப் பங்கேற்பாளர்கள் ஆராய்வார்கள்.
இந்த ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து இளம் பக்தர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இந்த சங்கம், ஒருவரது ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்தவும், சக ஆன்மீகச் சாதகர்களுடன் நீடித்த நட்புறவுகளை உருவாக்கவும், இறைவன் மற்றும் குருமார்களின் இருப்பில் வாழ்வதன் ஆனந்தத்தை அனுபவிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
2025 இளம் சாதகர் சங்கத்தின் ஒரு கண்ணோட்டம்
சங்கத்தின் சிறப்பம்சங்கள்
- கூட்டுத் தியானங்கள்
- புனித YSS தியான உத்திகளின் வழிகாட்டப்பட்ட பயிற்சியும் மறுஆய்வும்
- குழுவினருடன் பாடங்களைப் படித்தல் மற்றும் சுயபரிசோதனை
- குருதேவரின் போதனைகள் மற்றும் அவற்றை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் சத்சங்கங்கள்
- உணர்வுகளை ஆன்மிகமயமாக்கி, உறவுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடைமுறை வழிகளை ஆராயும் பயிலரங்குகளும் கலந்துரையாடல் குழுக்களும்
- கீர்த்தனைகள் – குழுவாக இறைநாமம் பாடும் பக்தி நிகழ்ச்சிகள்
- ஆன்மீக ஆலோசனை — கோரிக்கையின் பேரில் அனுபவம் வாய்ந்த சன்னியாசிகளிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதல்
- குரு சேவை — சங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அதாவது வழிகாட்டுதல், உணவு ஏற்பாடுகள், அலங்காரம், பதிவுமேசை, புத்தக அறை, ஒலி–ஒளி (ஆடியோ–வீடியோ) போன்றவற்றில் சேவை செய்வதற்கான வாய்ப்புகள்
- ஹட யோகா பயிற்சிகள், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கொண்ட தினசரி பொழுதுபோக்கு நேரம்.
- பிற இளம் சாதகர்களுடன் ஆன்மீகத் தோழமை
- இயற்கை எழில்மிகு இடத்திற்கு சுற்றுலா
நிகழ்ச்சி நிரல்
வகுப்புகளும் உரைகளும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
கிரியா யோக தீட்சை வழங்கும் விழா எதுவும் இல்லையென்றாலும், கிரியா யோக உத்தி குறித்த ஒரு மறுஆய்வு வகுப்பு நமக்கு உண்டு.
விரிவான கால அட்டவணை, நிகழ்ச்சிக்கு முன்பாக வெளியிடப்படும். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு இப் பகுதியைப் பார்வையிடவும்.
மேலும் தகவல்களுக்கு
23 முதல் 35 வயதுக்குட்பட்ட YSS/SRF பக்தர்கள் இந்தச் சங்கத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.
நீங்கள் இந்த வயது வரம்பிற்குச் சற்று அப்பாற்பட்டவராக இருந்தாலும், இதில் பங்கேற்க மனப்பூர்வமான ஆர்வம் கொண்டிருந்தால், வழிகாட்டுதலைப் பெற [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்புங்கள்.
பணம் அனுப்புதல்கள்:
- ஒருவருக்கான பதிவுக் கட்டணம் ₹2,500/- ஆகும். இக்கட்டணத்தில் உணவுக்கான செலவும் அடங்கும்.
- பதிவுக் கட்டணம் தர இயலாதவர்களுக்கு நிதி உதவியும் உள்ளது. கட்டணம் தருவதற்குச் சிரமம் இருந்தால், (0651 6655 555) என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது [email protected] -க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ YSS உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
கூடுதல் விவரங்கள்
முதலில் வருவோருக்கு முன்னுரிமை:
- வசதிகள் குறைவாக இருப்பதால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பதிவுகள் உறுதி செய்யப்படும்.
- அதிகபட்ச பங்கேற்பாளர்களின் பஎண்ணிக்கை எட்டப்பட்டவுடன், பதிவுகள் முன்னதாகவும் மூடப்படலாம்.
தகுதி:
- YSS/SRF பக்தர்கள் மட்டுமே சங்கத்தில் பங்குகொள்ளலாம்.
- SRF பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கப்பட்டாலும், அவர்கள் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும். அத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் இங்கே உள்ளது.
முழு பங்கேற்பு:
சங்கத்தின் திட்டமிட்ட எல்லா நாட்களிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் அட்டவணை மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதால், உடல் பலவீனமான, சிறப்புத் தேவை உள்ள அல்லது அலுவலகப் கடமைகள் அதிகம் உள்ள பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவு குறித்த தகவல்கள்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன!
பதிவு செய்யும் முறை குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:
பக்தர் இணையதளம் வாயிலாக இணையவழிப் பதிவு:
விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய , கீழே உள்ள பட்டனை அழுத்தி ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.
உதவி மையத்தைத் தொடர்புகொண்டு பதிவு செய்ய:
ராஞ்சி ஆசிரமத்தின் உதவி மையத்தை (0651 6655 555) தொலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு, பின்வரும் விவரங்களை வழங்கவும்:
- உங்கள் முழுப் பெயர்
- வயது
- முகவரி
- மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
- YSS பாடங்களுக்கான பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
- நீங்கள் வருகை தரும் மற்றும் புறப்படும் தேதிகள்.
உங்கள் அலைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் பேமெண்ட் லிங்க் மூலம் நீங்கள் தொகையைச் செலுத்தலாம்.
SRF பக்தர்களுக்கான பதிவு:
- ஆர்வமுள்ள SRF பக்தர்கள் YSS உதவி மையத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு, மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- SRF பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், அங்கு உணவருந்தவும் அன்புடன் வரவேற்கப்பட்டாலும், அவர்கள் தங்குவதற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஹோட்டலில் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் இங்கேஉள்ளது.
கவனத்திற்கு:
- உங்கள் பதிவு உறுதிசெய்யப்பட்டு ஆனால் உங்களால் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், பதிவுக் கட்டணத்தை திரும்ப வழங்கவோ அல்லது வேறொரு நபருக்கு மாற்றவோ படமாட்டாது.
- பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், மின்னஞ்சல், வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் உறுதிப்படுத்தல் தகவல் உங்களுக்கு கிடைக்கும். அத்தகைய தகவல் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், தயவுசெய்து YSS ராஞ்சி உதவி மையத்தை தொலைபேசி எண் – (0651 6655 555) அல்லது மின்னஞ்சல் – ([email protected]) மூலம் தொடர்புகொள்ளவும்.
- இந்நிகழ்ச்சி புதன்கிழமை காலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை மதியம் நிறைவடையும்.
- YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் மாலை நேர தியானம், கலந்துரையாடல்கள் மற்றும் அறிமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, பங்கேற்பாளர்கள் அக்டோபர் 6, செவ்வாய்கிழமை மதியத்திற்குள் நொய்டா ஆசிரமத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரமத்தில் அதிக நேரம் இருக்க விரும்புவோர், நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வருவதற்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு கூடுதலாக ஒரு நாள் தங்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.
- பகிரக்கூடிய தங்குமிட வசதி, பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தனித்தனியாகப் வழங்கப்படும். எனவே, குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்பத் திட்டமிட்டுத் தங்கள் உடைமைகளை கொண்டுவரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசிரம வளாகத்திற்குள்ளேயே தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிறப்பான தங்குமிடம் அல்லது உணவுமுறை தேவைப்படுபவர்கள், ஆசிரமத்திற்கு வெளியே அதற்கான ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் இங்கே உள்ளது.
இந்தச் சங்கம் பெரும்பாலும் “இளம் சாதகர்களுக்காக, இளம் சாதகர்களால்” நடத்தப்படுவதாகும். சங்கத்தின் போது பதிவு செய்வது, தங்குமிட வசதி, ஒலி-ஒளி அமைப்பு, உணவு, சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் பிற துறைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் சேவை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவற்றில் சில பணிகளுக்கு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தன்னார்வலர்கள் வருகை தர வேண்டியிருக்கலாம்.
நீங்கள் சேவை செய்ய விரும்பினால், உங்கள் பதிவு செய்யும் படிவத்தை நிரப்பும்போது அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கவும்.
உங்கள் நிதியுதவி வரவேற்கப்படுகிறது
இந்தச் சங்கத்தை ஏற்பாடு செய்வதில் உண்டாகும் பல்வேறு செலவுகளை ஈடுகட்ட நீங்கள் அளிக்கும் பங்களிப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட சாதகர்களும் இதில் பங்கேற்கும் வகையில், பதிவுக்கட்டணம் குறைக்கப்பபட்டுள்ளது (மானியத்தால்). இந்த கட்டணக் குறைப்பை வழங்குவதன் மூலம் உண்மையான நாட்டமுள்ள அனைவருக்கும் குருதேவரின் விருந்தோம்பலை அளிக்க எங்களுக்கு உதவும் வகையில் அதிகளவில் நன்கொடை அளிப்பவர்களுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
இளைஞர்களுக்கான திட்டங்கள் குறித்து மேலும் அறிய விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

















