இளம் சாதகர் சங்கம்

(ராஞ்சி ஆசிரமம்)

புதன்கிழமை, 10 செப்டம்பர், 2025 – ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது!

நிகழ்வு பற்றி

மனமும் உணர்வும் உள்முகமாகத் திசைதிருப்பப் படுகையில், அவனது ஆனந்தத்தை உணரத் தொடங்குகிறீர்கள். புலன்களின் இன்ப நுகர்வுகள் நீடிக்காதவை; ஆனால் இறைவனது ஆனந்தம் என்றும் நீடித்திருக்கும். அது ஒப்புவமையற்றது!

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு புதிய திட்டம் மலர்கிறது

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) முதன்முறையாக இத்தகைய ஒரு தொடக்க முயற்சியாக, இளம் சாதகர்களுக்கு (வயது 23-35) பிரத்தியேகமாக ஒரு சாதனா சங்கம் வழங்குகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் – இது அமைதியான YSS ராஞ்சி ஆசிரமத்தில் செப்டம்பர் 10 முதல் 14, 2025 வரை நடைபெறும் ஆன்மீகத்தில் ஆழ்ந்து மூழ்கும் அனுபவமாகும்.

இந்த சிறப்பு சங்கம், பரமஹம்ஸ யோகானந்தரின் அகத் தெளிவு மற்றும் சக்திக்குமான உலகளாவிய போதனைகளில் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் ஆர்வத்தின் வெளிப்பாடாகும்.

இந்தியா முழுவதிலும் இருந்து வரும் நூற்றுக்கணக்கான இளம் சாதகர்கள் ஒன்றுகூடி, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் ஆழந்து செல்வதற்கும், ஆத்மார்த்தமான நட்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், வேகமாக இயங்கும் நவீன உலகத்திற்கு ஏற்ற சமநிலை ஆன்மீக வாழ்க்கை முறையைக் கண்டறியவும் ஒரு புனிதமான சூழலை சங்கம் வழங்குகிறது.

யோக வாழ்க்கை முறைக்கு ஊட்டமளிக்கும் ஆன்மீக நடைமுறை

யோகானந்தரின் சமநிலையான வாழ்க்கை என்ற லட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட சங்க நிகழ்வின் சமயம் தினசரி வழக்கம் எளிமையானதாக இருந்தாலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும்: தியானங்கள் மற்றும் கீர்த்தனைகள், சுவாரஸ்யமான வகுப்புகள் மற்றும் பயிலரங்குகள், ஆனந்தமான சேவா, அகத் தூண்டுதல் அளிக்கும் சத்சங்கங்கள், YSS பாடங்கள் கற்றல், சுய ஆய்வு, மற்றும் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் தோழமைக்கான நேரம்.

இந்த முழுமையான யோக வாழ்க்கை முறை, இளம் சாதகர்களுக்காகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது — அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று.

சங்கத்தின் சிறப்பம்சங்கள்

இந்த நிகழ்ச்சி, YSS தியான உத்திகள் மறு ஆய்வு மற்றும் வழிநடத்தப்படும் பயிற்சியை உள்ளடக்கியது என்றாலும், குறிப்பாக இளம் சாதகர்களுக்காகப் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பின்வருவன அடங்கும்:

  • கூட்டுத் தியானங்கள் மற்றும் கீர்த்தனைகள்
  • புனித YSS தியான உத்திகளின் மறு ஆய்வு மற்றும் வழிநடத்தப்படும் பயிற்சி வகுப்புகள்
  • பாடங்களை இணைந்து படித்தல் மற்றும் அக ஆய்வு
  • குருஜியின் போதனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடு குறித்த ஊக்கமளிக்கும் சத்சங்கங்கள்
  • பின்வரும் தலைப்புகளில் செயல்முறை பயிலரங்குகள் மற்றும் கலந்துரையாடல் குழுக்கள்
    • ஆன்மீக விவேகத்துடன் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுத்தல்
    • வேகமான உலகில் அக சமநிலையைக் கண்டறிதல்
    • கனிவுடனும் பரிவுடனும் உறவுகளைப் போற்றுதல்
    • வெற்றியின் விதிமுறையைப் பயன்படுத்துதல்
  • ராஞ்சிக்கு அருகிலுள்ள ஒரு இயற்கை இடத்திற்கு சுற்றுலா
  • ஹத யோகா அமர்வுகள், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள்
  • பிற இளம் சாதகர்களுடன் தோழமை
நிகழ்ச்சி அட்டவணை

வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் இருக்கும்.

கிரியா யோக தீட்சை நிகழ்ச்சி இல்லையென்றாலும், கிரியா யோக உத்தி குறித்த மறுஆய்வு வகுப்பு நடத்தப்படும்.

விரிவான அட்டவணை நிகழ்வு தேதி நெருங்கும் சமயத்தில் கிடைக்கும். நிகழ்வு தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியைப் பாருங்கள்.

பதிவு

23 முதல் 35 வயதுக்குட்பட்ட YSS பக்தர்கள் சங்கத்திற்கு பதிவு செய்யலாம். நீங்கள் இந்த வயது வரம்பிற்கு சற்று வெளியே இருந்தால், ஆனால் பங்கேற்க உண்மையிலேய ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தால், வழிகாட்டுதலுக்காக YSS உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

உணவுக் கட்டணங்களையும் உள்ளடக்கியப் பதிவு கட்டணமானது ஒரு நபருக்கு ₹2500/-. பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கூடுதல் விவரங்கள்:

  • முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.
  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே சங்கத்தில் கலந்து கொள்ளலாம்.
  • SRF பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள் என்றாலும், அவர்கள் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சி இடைவிடாத நிகழ்ச்சி அட்டவணையைக் கொண்டிருப்பதால், பலவீனமான உடல்நலம் அல்லது சிறப்புத் தேவைகளைக் கொண்ட பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிவு குறித்தத் தகவல்

பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது!

பதிவு செயல்முறை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:

பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு:

விரைவான மற்றும் எளிதான பதிவுக்கு, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்து ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.

உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிவு:

(0651 6655 555) என்ற எண்ணை அழைத்தோ அல்லது ராஞ்சி ஆசிரம உதவி மையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியோ, பின்வரும் விவரங்களை வழங்குங்கள்:

  • உங்கள் முழுப் பெயர்
  • வயது
  • முகவரி
  • மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
  • YSS பாடப் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • உங்கள் வருகை மற்றும் புறப்படும் தேதிகள்.

உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பு வழியாக தொகையை அனுப்பலாம்.

SRF பக்தர்களுக்கான பதிவு:

  • ஆர்வமுள்ள SRF பக்தர்களை மின்னஞ்சல் மூலம் YSS உதவி மையத்தை தொடர்பு கொண்டு மேலே குறிப்பிட்டுள்ளபடி தங்கள் விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • SRF பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அந்த இடத்திலேயே உணவு அருந்தலாம் என்றாலும், அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஹோட்டலில் தங்கள் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கவனிக்கவும்:

  • உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டு, நீங்கள் கலந்து கொள்ள முடியாவிட்டால், பதிவு கட்டணம் திருப்பித் தரப்படவோ அல்லது வேறு நபருக்கு மாற்றப்படவோ இயலாது.
  • பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். அத்தகைய அறிவிப்பை நீங்கள் பெறவில்லை என்றால், YSS ராஞ்சி உதவி மையத்தை தொலைபேசி (0651 6655 555) அல்லது மின்னஞ்சல் ([email protected]) மூலம் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்

இந்த நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் முடிவடையும். பங்கேற்பாளர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், அனைவரும் இரண்டு நாட்கள் முன்னதாக வந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு கூடுதலாக ஒரு நாள் தங்குவதை வரவேற்கிறோம்.

பகிர்வு தங்குமிடம் பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தனித்தனியே வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்பத் திட்டமிட்டு, உடைமைகளை எடுத்து வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசிரம வளாகத்திற்குள் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவ்வாறாயினும், சிறப்பு தங்குமிடம் அல்லது உணவு தேவைகள் கொண்ட பக்தர்கள் தயவுசெய்து தங்கள் சொந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னார்வப் பணி மற்றும் சேவை வாய்ப்புகள்

கடந்த காலங்களைப் போலவே, பதிவு, தங்குமிடம், ஒலி-ஒளி, உணவு, சுகாதாரம், வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல்வேறு துறைகளிலும் பணியாற்ற பக்தர்-தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றில் சில பகுதிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தன்னார்வலர்கள் வர வேண்டியிருக்கலாம்.

சேவை வழங்க உத்வேகம் பெற்றதாக உணர்ந்தால், உங்கள் பதிவு படிவத்தை படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது உங்கள் ஆர்வத்தைக் குறிப்பிடுங்கள்.

உங்கள் நிதி உதவி பாராட்டப்படுகிறது

இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் உண்டாகக்கூடியப் பல்வேறு செலவுகளை ஈடுசெய்ய பங்களிப்புகளைக் கோருகிறோம். பதிவுக் கட்டணம் மானியமாக வழங்கப்படுகிறது, இதனால் குறைந்த வசதி உள்ள பக்தர்கள் கூட பங்கேற்க முடியும். தாராளமாக நன்கொடை வழங்க இயன்றோர்க்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இது இந்த மானியத்தை வழங்கவும், அதன் மூலம் குருதேவரின் உபசரிப்பை அனைத்து நேர்மையான சாதகர்களுக்கும் நீட்டிக்கவும் வழிவகுக்கிறது.

பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி 834 001

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை)
மின்னஞ்சல்: [email protected]

இளைஞர்களுக்கான எங்களது திட்டங்கள் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர