ஜன்மாஷ்டமி மூன்று-மணி நேர தியானம்
YSS/SRF தலைவர்
ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன்

சனிக்கிழமை, ஆகஸ்ட் 16

இரவு 7:30 மணி

– இரவு 10:30 மணி

(IST)

நிகழ்வு பற்றி

ஆண்டுதோறும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, இந்தியாவின் அன்பிற்குரிய அவதாரமான பகவான் கிருஷ்ணனின் அவதார தினமாகிய ஜன்மாஷ்டமியை கொண்டாடுகிறது. அவன் தம் போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன. இந்த மகிழ்ச்சியான வருடாந்திர கொண்டாட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16, சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு நாளில், YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்தில் இருந்து இரவு 7:30 மணி முதல் 10:30 மணி (Indian Standard Time) வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சிறப்பு ஜன்மாஷ்டமி மூன்று மணி நேர தியானம் வழிநடத்தினார். தியானத்தின் போது, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகளின் கீர்த்தனைக் குழு, ஸ்வாமி சிதானந்தாஜியுடன் நேரடி ஒளிபரப்பு மூலம் இணைந்து, பக்திபூர்வ கீதங்கள் இசைத்தார்கள்.

இந்த சிறப்பு தியானம் ஆங்கிலத்தில் நடைபெற்றது, மேலும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு இந்தி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் கிடைக்கப் பெற்றன. கூடுதலாக, இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் பிற சர்வதேச மொழிகளுக்கான துணை தலைப்புகள் கூடிய விரைவில் வீடியோவில் சேர்க்கப்படும்.

இந்த வீடியோ தொடர்ந்து பார்க்கக் கிடைக்கும்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர