புது வருட முன் தின தியானம்

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

இரவு 11:30 மணி (டிசம்பர் 31)

– அதிகாலை 12:15 (ஜனவரி 1)

(IST)

நிகழ்வு பற்றி

புத்தாண்டின் தொடக்கத்தில், நாம்‌ தீர்மானமான முடிவுடனும்‌ ஆன்மீக உறுதியுடனும்‌ நம்‌ வாழ்க்கையின்‌ புதிய சகாப்தத்தில்‌ நுழைவோம்‌.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தரின் கூற்றுப்படி, புத்தாண்டு பிறப்பு என்பது நமது பயனுள்ள இலக்குகள் மற்றும் நாட்டங்கள் குறித்து சிந்திப்பதற்கான சரியான நேரம் ஆகும். இந்த முயற்சியில் நமக்கு உதவும் வகையில் தியானத்துடன் புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரியத்தை அவர் நிறுவினார்.

புத்தாண்டை வரவேற்கும் இந்த தனித்துவமான வழியை அனுபவிக்க ஒரு சிறப்பு புது வருட முன் தின தியானம் YSS சன்னியாசி ஒருவரால் நடத்தப்பட்டது.

புது வருட முன் தின தியானம் நமது ஆசிரமங்கள், தியான மையங்கள் மற்றும் மண்டலிகளிலும் நடத்தப்பட்டது.

இந்த புத்தாண்டு சமயத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு பங்களிக்க உங்களை வரவேற்கிறோம். நன்கொடை அளிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர