ஆன்லைன் பிரார்த்தனை அமர்வுகள்

(தினசரி)

சனி, மே 10 - வெள்ளி, மே 23

இரவு 9:00 மணி

– இரவு 9:20 மணி

(IST)

நிகழ்வு பற்றி

ஆயிரக்கணக்கானோரின் பிரார்த்தனைகள் ஒன்றிணையும்போது உருவாகும் அமைதி மற்றும் தெய்வீக குணப்படுத்துதலின் சக்திவாய்ந்த அதிர்வுகள் விரும்பிய பலன்களை வெளிப்படுத்த உதவுவதில் ஈடிணையற்ற மதிப்புடையதாயிருக்கும்.

ஒரு புதுப்பிப்பு: நமது நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளதால், அன்பு மற்றும் குணப்படுத்துதலுக்கான இந்த தன்னலமற்ற சேவையில் பங்கேற்ற அனைவருக்குமான மனமார்ந்த நன்றியுடன் மே 23, வெள்ளிக்கிழமை அமர்வுக்குப் பிறகு, இந்த சிறப்பு முயற்சி நிறைவு செய்யப்பட்டது.

உங்கள் தினசரி தியானங்களின் போதும் மற்ற நேரங்களிலும், உங்கள் அன்பிற்குரியவர்களையும், உலகத்தையும், தெய்வீக ஒளி மற்றும் குணப்படுத்துதலில் ஆழ்த்தி, நமது அன்பிற்குரிய குருதேவர், பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி, பிரார்த்தனை மற்றும் குணப்படுத்தும் உத்திப் பயிற்சி செய்வதைத் தொடரக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வந்த பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நமது பக்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கை, ஆறுதல் மற்றும் உறுதி அளிக்கும் அதிர்வுகளை அனுப்ப உதவும் வகையில் தினசரி ஆன்லைன் பிரார்த்தனை அமர்வு ஒன்று தொடங்கப்பட்டது. கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் நாம் உணர்ந்தததைப் போல, நமது கூட்டுத் தியானங்களும் பிரார்த்தனைகளும் கட்புலனாகாதவை என்றாலும், ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும்.

ஒவ்வொரு பிரார்த்தனை அமர்வும் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இது ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒரு குறுகிய கால உத்வேகம் தரும் வாசிப்பு, அல்லது கீதம் இசைத்தல் அல்லது சங்கல்பம் இருந்தது. இதைத் தொடர்ந்து ஒரு சிறிது நேர மௌன தியானம் நடந்தது, இதன் போது YSS/SRF உலகளாவிய பிரார்த்தனை சபையின் மூலம் உதவி கோரியவர்களுக்காக நாம் மனதளவில் பிரார்த்தனை செய்தோம். பக்தர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுக்காக அல்லது தங்கள் சொந்த சவால்களை எதிர்கொள்ளும் வலிமைக்காக தனிப்பட்ட பிரார்த்தனைகளையும் செய்து கொள்ள முடிந்தது. பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த குணப்படுத்தும் உத்தி செயல்முறை மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு நிறைவுற்றது.

உலகளாவிய பிரார்த்தனைக் குழு

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்ட கீழே உள்ள உலகளாவிய பிரார்த்தனைக் குழு சிறுநூலை (PDF வடிவம்) வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

அனைத்து YSS ஆசிரமங்களிலும் உள்ள எங்கள் சன்னியாசிகள் தேவைப்படுபவர்களுக்காக தொடர்ந்து ஆழ்ந்த பிரார்த்தனை செய்கிறார்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம். உங்களுக்காகவோ அல்லது வேறொருவருக்காகவோ நாங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இங்கே கிளிக் செய்யுங்கள்:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர