YSS International Day of Yoga Main Webpage Banner – 2026

சர்வதேச யோகா தினம்

யோக தத்துவம் மற்றும் விஞ்ஞானத்திற்கு உலகம் இப்போது ஆண்டுதோறும் மரியாதை செலுத்துகிறது என்பதை அறிந்துகொள்வதில் பரமஹம்ஸர் மிகவும் மகிழ்ச்சியடைவார், ஏனெனில் காலத்தால் அழியாத யோக தியான உத்திகளை மெய்ப்பொருள் நாடும் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதற்கு அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, யோகம் பற்றிய இன்றைய உலக ஆர்வம் பெருமளவு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பரமஹம்ஸ யோகானந்தர் எடுத்துச் சென்ற போதனைகளின் விளைவாகும். “சர்வதேச யோகா தினம் குறித்த இந்தியாவின் யோசனை ஐ.நா. வில் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றால், அந்த பெருமை அமெரிக்காவில் இந்தியாவின் முதல் யோக குரு பரமஹம்ஸ யோகானந்தரையே சேரும்” என்று ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்காவில் யோகத்திற்கு அடித்தளம் அமைத்ததில் அவர் பெரும் பங்கு வகித்தார்.”

பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.

நிகழ்வுகள் பற்றி

வாழ்க்கையின் அன்றாடச் சவால்களுக்கு மத்தியிலும், அசைக்க முடியாத சாந்தம் மற்றும் அக அமைதியை உணர்ந்து, அதைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது எவ்வாறு? அனைத்துச் சூழல்களிலும் தங்கள் அகச் சமநிலையை பாதுகாப்பது எப்படி என்பதை, மெய்ப்பொருள் நாடுவோர் கண்டறிய உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள, யோகா-தியானம் குறித்த ஊக்கமளிக்கும் அறிமுக அமர்வுகளில் கலந்து கொள்ளுங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரின் காலத்தால் அழியாத கிரியா யோகப் போதனைகளின் அடிப்படையில் அமைந்த இந்த ஆன்லைன் நிகழ்ச்சிகள், யோகம் எவ்வாறு ஆழ்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும் இறை அமைதி உணர்தலுக்கு வழிவகுத்து, நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்படும் இந்த அமர்வுகளில், விஞ்ஞானபூர்வ ஆன்மீக போதனைகள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, உங்கள் மனத்தை ஆழ்ந்த அமைதியில் நிலைநிறுத்த உதவும் வகையில், சரியான அமர்வுநிலை, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக்காட்சி காணும் உத்திகளின் அடிப்படைகளை உள்ளடக்கிய வழி நடத்தப்படும் தியானம் இடம்பெறும்.

நண்பர்களையும், யோகா-தியானத்தில் ஆர்வமுள்ள அனைவரையும், இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்க கேட்டுக் கொள்கிறோம்.

ஃபீசர்ட் ஈவன்ட்

“யோகா-தியானம் மூலம் அமைதியை உணருங்கள்”

(வழி நடத்தப்படும் தியான அமர்வை உள்ளடக்கியது)

ஞாயிறு, ஜூன் 14, 2026
மாலை 6:30 முதல் 7:30 வரை (IST)

YSS சென்னை ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, YSS சன்னியாசி ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்களால் வழிநடத்தப்படும். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

அனைத்து ஆன்லைன் நிகழ்வுகள்

“யோகா-தியானம் மூலம் அமைதியை உணருங்கள்”

(வழி நடத்தப்படும் தியான அமர்வை உள்ளடக்கியது)

சனிக்கிழமை, ஜூன் 13, 2026
காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை (IST)

YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, YSS சன்னியாசி ஸ்வாமி ஸ்ரேயானந்த கிரி அவர்களால் வழிநடத்தப்படும். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

“யோகா-தியானம் மூலம் அமைதியை உணருங்கள்”

(வழி நடத்தப்படும் தியான அமர்வை உள்ளடக்கியது)

சனிக்கிழமை, ஜூன் 13, 2026
காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை (IST)

YSS சென்னை ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, YSS சன்னியாசி ஸ்வாமி கேதாரானந்த கிரி அவர்களால் வழிநடத்தப்படும். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

“யோகா-தியானம் மூலம் அமைதியை உணருங்கள்”

(வழி நடத்தப்படும் தியான அமர்வை உள்ளடக்கியது)

சனிக்கிழமை, ஜூன் 13, 2026
மாலை 6:30 முதல் இரவு 7:30 வரை (IST))

YSS நொய்டா ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, YSS சன்னியாசி ஸ்வாமி ஆத்யானந்த கிரி அவர்களால் வழிநடத்தப்படும். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

“யோகா-தியானம் மூலம் அமைதியை உணருங்கள்”

(வழி நடத்தப்படும் தியான அமர்வை உள்ளடக்கியது)

ஞாயிறு, ஜூன் 14, 2026
காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை (IST)

YSS ராஞ்சி ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, YSS சன்னியாசி ஸ்வாமி ஈஸ்வரானந்த கிரி அவர்களால் வழிநடத்தப்படும். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

“யோகா-தியானம் மூலம் அமைதியை உணருங்கள்”

(வழி நடத்தப்படும் தியான அமர்வை உள்ளடக்கியது)

ஞாயிறு, ஜூன் 14, 2026
மாலை 6:30 முதல் 7:30 வரை (IST)

YSS சென்னை ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, YSS சன்னியாசி ஸ்வாமி சுத்தானந்த கிரி அவர்களால் வழிநடத்தப்படும். இது பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

நேரடி நிகழ்ச்சிகள்

இந்த ஆன்லைன் நிகழ்வுகளுக்கு கூடுதலாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு YSS கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் நேரடி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். மேலும் விவரங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்களுக்கு, கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்:

ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்திற்கான சிறப்பு சலுகைகள்

இத்தருணத்தில், ஒரு யோகியின் சுயசரிதம் இலவச மின் புத்தகப் பிரதியை (ஆங்கிலம் மற்றும் பல பிற மொழிகளில்) நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். மேலும், இந்த ஆன்மீக உன்னதத்தின் அச்சிடப்பட்ட அனைத்துப் பதிப்புகளும் 25% தள்ளுபடியில் கிடைக்கின்றன.


ஒரு யோகியின் சுயசரிதம் 

 

— மின்புத்தகம் இலவசமாகப் பெறுங்கள்

கிடைக்கப் பெறும் காலம்:
ஜூன் 22, 2026

YSS International Day of Yoga 2026 — Bookstore Discount Banner

கிடைக்கப் பெறும் காலம்:
ஜூன் 22, 2026


பரமஹம்ஸ யோகானந்தர் பற்றி

Founder Paramahansa Yoganandaபரமஹம்ஸ யோகானந்தர் தனது விரிவான போதனைகளால் லட்சக் கணக்கானவர்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். “மேற்கில் யோகத்தின் தந்தை” என்று பரவலாகக் கருதப்படும் பரமஹம்ஸர், விஞ்ஞான முறை பிராணாயாம (உயிர் சக்தி கட்டுப்பாடு) உத்திகளைக் கொண்ட உலகளாவிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார். யோகத்தின் இறுதி இலக்கு, தன்னை எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆன்மாவாக உணர்வதே ஆகும். யோகானந்தரின் திட்டம் — யோகதா சத்சங்க பாடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது — சமயத்தின் இந்த உள்ளார்ந்த அடிப்படைக்கு ஒரு நடைமுறை அணுகுமுறையை வழங்குகிறது. மேலும் இது ஹத யோகத்தின் சரீர ரீதியான நன்மைகளில் ஆர்வமுள்ளவர்களை மட்டுமல்லாமல், தங்கள் மன திறன்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள அதிக மக்களையும் ஈர்க்கும் ஒரு அமைப்பாகும்.

அவரது போதனைகள் மற்றும் அவர் கற்பித்த தியான உத்திகள் இன்று கீழே காண்பவைகள் மூலம் கிடைக்கின்றன:

மற்றவர்கள் கூறியவை


யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பற்றி

Main Building of Ranchi Ashramகடந்த 100 ஆண்டுகளாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) அதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தோன்றிய புனித ஆன்மீக விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை கிடைக்கச் செய்வதற்காக 1917 இல் யோகதா சத்சங்க சொஸைடியை நிறுவினார். இந்த சமய சார்பற்ற போதனைகள் முழுமையான வெற்றி மற்றும் நல்வாழ்வை அடைவதற்கான ஒரு முழுமையான தத்துவம் மற்றும் வாழ்க்கை முறையையும், அத்துடன் பரம்பொருளுடன் (இறைவன்) ஆன்மத்தின் ஐக்கியம் என்ற வாழ்க்கையின் இறுதி இலக்கை அடைவதற்கான தியான முறைகளையும் உள்ளடக்கியது.

பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.


புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர