பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி தினம்

நினைவு தியானம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 7, 2025

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

என்னுடைய சரீரம் மறைந்துவிடலாம், ஆனால் என் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மேலும் என் ஆன்மா வாழ்ந்து கொண்டே இருக்கும்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

மகாசமாதி என்பது முக்தி அடைந்த யோகி, ஸ்தூல உடலிலிருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறுவதைக் குறிக்கிறது. நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி புனித தினத்தில், YSS சன்னியாசி ஒருவரால் ஆன்லைன் தியானம் வழி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், உத்வேகம் அளிக்கும் வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன.

இந்த விசேஷ நாளில், பல்வேறு ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தின.

இந்த விசேஷ தினம், குரு தங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் அளவிடற்கரிய அருளாசிகளுக்கு அவருக்கு மரியாதை செலுத்தி, குரு-காணிக்கை மூலம் நன்றியை வெளிப்படுத்தும் நாளாக பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்கொடையை நீங்கள் ஆன்லைனில் அளிக்கலாம். உங்கள் தாராளமான பங்களிப்பு அவருடைய உத்வேகம் தரும் போதனைகளைப் பரப்ப உதவும்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர