குருவிடம் ஆழ்ந்த அன்பு செலுத்தவும். குருவுடன் சேர்ந்திருத்தல் என்பது அவருடைய பௌதீக வடிவின் முன் இருப்பது என்பது மட்டுமின்றி, (சில சமயங்களில் இது சாத்தியமற்றது என்பதால்), அவரை நமது இதயங்களில் இருத்தி, கொள்கையளவில் அவருடன் ஒன்றாக இருந்து அவருடன் நம்மை இசைவிப்பது என்று முக்கியமாக பொருள்படும்.
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி
குரு பூர்ணிமா புனித நன்னாளில், YSS பக்தர்கள், போற்றுதலுக்குரிய YSS குருமார்கள் பரம்பரைக்குத் தங்கள் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகின்றனர்; குறிப்பாக, அவரது தெய்வீக அகத் தூண்டுதலாலும் வழிகாட்டுதலாலும் நம்மை ஆன்ம-அனுபூதிப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தும் நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்குத் தங்கள் நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைக் நினைவு கூர்வதற்கும், புனித குரு-சிஷ்ய உறவைப் போற்றுவதற்கும், ஜூலை மாதம் நடைபெறும் பின்வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்:
- செவ்வாய்க்கிழமை, ஜூலை 28: YSS சன்னியாசி வழங்கும் இந்தி சொற்பொழிவு
- புதன்கிழமை, ஜூலை 29: நினைவு தியானம்
बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय
(நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும் குருவுக்கு மகிமை)
செவ்வாய்க்கிழமை, ஜூலை 28, 2026
மாலை 6:30 – இரவு 7:30 (IST)
இந்தச் சொற்பொழிவில், மனித ஆன்மாவை இறைத்தன்மையுடன் இணைக்கும் ஒரு மெய்யான, ஜீவனுள்ள பாலமாக குரு திகழ்கிறார் என்பதைப் பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான போதனைகள் மூலம் YSS சன்னியாசி ஸ்வாமி வாசுதேவானந்த கிரி விளக்குகிறார். நம்முடைய ஆன்மீக விழிப்புணர்வின் மூலத்தை அங்கீகரிக்காமல் ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதை நினைவூட்டுகிறார்; மேலும், குரு பூர்ணிமா என்பது வெறும் சடங்கு சார்ந்த வழிபாட்டிற்கான நாள் மட்டுமல்ல, மாறாக நமது அக இருளை நீக்கும் அறிவு ஒளியைக் கொண்டாடுவதற்கான நாள் என்பதே அதன் சாராம்சம் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
இந்தியில் இந்த சொற்பொழிவு “बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय (நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும் குருவுக்கு மகிமை)” என்ற தலைப்பில் உள்ளது.”
“गुरु गोविंद दोऊ खड़े, काके लागूं पाँय
बलिहारी गुरु आपने, गोविंद दियो बताय”
15 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மறைஞானி மற்றும் கவிஞரான கபீரின் அழகான மேற்கண்ட ஈரடியைப் பற்றி ஸ்வாமி வாசுதேவானந்தா விளக்குகையில், குருவின் அருள் அவரது விவேகம் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல், எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் இருப்பை ஒரு சாதகனால் (தேடுபவரால்) காண முடியாமல், அவன் ‘குருடனாகவே’ இருப்பான் என்று கூறுகிறார். குருவே மனமாகிய கண்ணாடியை மெருகூட்டி, அறியாமையின் இருளை நீக்கி, இறைவனுக்கானப் பாதையை காட்டுகிறார். எனவே, அந்த உன்னத இலக்கை (இறைவனை) அடைவதற்கு முன்பாகவே, அந்த மெய்ஞானத்தை உணர்த்தும் ஊடகமாகத் திகழும் குருவை நாம் போற்றி வணங்குகிறோம்.
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து இந்த சொற்பொழிவை கேட்க உங்களை வரவேற்கிறோம்.
கவனிக்கவும்: இந்த சொற்பொழிவு ஜூலை 30 வியாழக்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்கக் கிடைக்கும்.
நினைவு தியானம்
புதன்கிழமை, ஜூலை 29, 2026
காலை 6:30 – காலை 8:30 (IST)
ஜூலை 29 அன்று, YSS சன்னியாசி ஒருவரால் வழி நடத்தப்படும் ஒரு சிறப்பு ஆன்லைன் தியான நிகழ்ச்சி நடைபெறும். இதில் கீர்த்தனம், தியானம் மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு சொற்பொழிவும் இடம்பெறும்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 1 சனிக்கிழமை இரவு 10 மணி (IST) வரை பார்க்கக் கிடைக்கும்.
நேரில் நிகழ்ச்சிகள்
குரு பூர்ணிமாவை நினைவு கூரும் சிறப்பு நிகழ்ச்சிகள் YSS ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் நேரில் நடத்தப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் அறியவும், இந்நிகழ்ச்சிகள் ஒன்றில் பங்கேற்கவும், உங்கள் அருகிலுள்ள தியான மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் செய்தி
இந்த தருணத்தில் நம் வணக்கத்திற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் சிறப்பு செய்தியைப் படிக்க, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்:
இந்தப் புனித நாளில் காணிக்கை செலுத்த நீங்கள் விரும்பினால், கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் அதைச் செய்யலாம். YSS குரு பரம்பரையின் வாயிலாகக் கிடைக்கப்பெறும் எண்ணற்ற ஆசிகளுக்கான மனமார்ந்த நன்றியுணர்வின் வெளிப்பாடாகவே உங்கள் தாராள மனப்பான்மையை நாங்கள் கருதுகிறோம்; அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் வாழ்வில் அவர்கள் பொழிந்த ஏராளமான அருளாசிகளுக்காக நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தர் மற்றும் YSS குரு பரம்பரைக்கு உங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கவும், அவரது தெய்வீகப் பணிக்குச் சேவை செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் விரும்பினால், குரு பூர்ணிமா வேண்டுகோளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்:
To make an offering on this special occasion, please click the button below:

















