இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது.
வரவிருக்கும் நிகழ்வில் எங்களுடன் சேர விரும்பினால், நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

பரமஹம்ஸ யோகானந்தரின்
ஜன்மோத்ஸவ் நினைவுகூரும் நிகழ்ச்சிகள்

பரமஹம்ஸ யோகானந்தா ஜன்மோத்ஸவ் நினைவு தியானம் - ஜனவரி 05 2026

நிகழ்வு பற்றி

இறைவனிடம் அன்பு மற்றும் மனித குல சேவை ஆகிய உயரிய லட்சியங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையில் முழுமையாக வெளிப்பட்டன. கிழக்கையும் மேற்கையும் ஆன்மீக ரீதியாக ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், அனைத்து உள்ளங்களிலும் இறைவனுக்கான ஏக்கங்களை எழுப்பவும் அவர் இந்த பூமியில் அவதரித்தார். அவரது வழிமுறைகளில் அவர் நடைமுறைத்தன்மை கொண்டவராக இருந்தார்; அவரது போதனைகளும் வாழ்க்கையும் ஒரு உண்மையான இறைமனிதரின் ஞானத்தை வெளிப்படுத்தின. அவர் “ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம்” என்ற தத்துவத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றார்; நீடித்த மகிழ்ச்சியை அடைவதற்கு, எல்லையற்ற பரம்பொருளுடன் உணர்வுபூர்வமான ஆன்மத் தொடர்பு கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பரமஹம்ஸ யோகானந்தா: இன் மெமோரியம் புத்தகத்திலிருந்து

1893 ஆம் ஆண்டு கோரக்பூரில், ஒரு பக்தியுள்ள பெங்காலி குடும்பத்தில், முகுந்த லால் கோஷ் என்ற இயற்பெயருடன் பிறந்த யோகானந்தர், 1917 இல் யோகதா சத்சங்க சொஸைடியை (YSS) நிறுவியதன் மூலம் தனது வாழ்நாள் பணியைத் தொடங்கினார். அதன் நோக்கம், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புனித ஆன்மீக விஞ்ஞானமான கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை கிடைக்கச் செய்வதாகும்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் கிரியா யோகப் போதனைகளை வழங்கிய நமது அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தருக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு இரண்டு சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சிகளில் அவரது அவதார தினம் (ஜன்மோத்சவம்) நினைவுகூரப்பட்டது.

ஜன்மோத்ஸவ் 6 மணி நேர தியானம்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4, 2026
காலை 9:40 மணி – மாலை 4:00 மணி (IST)

ஒரு சிறப்பு நினைவுகூரும், ஆறு மணி நேர தியானம், ஜனவரி 4, ஞாயிற்றுக்கிழமை அன்று YSS சந்நியாசிகளால் வழிநடத்தப்பட்டது. பக்தி கீதங்கள், உத்வேகமூட்டும் வாசிப்புகள் மற்றும் தியானம் ஆகியவற்றைக் கொண்ட ஆன்மீக எழுச்சியூட்டும் இந்த நிகழ்ச்சி, YSS ராஞ்சி ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

ஜன்மோத்ஸவ் நினைவு தியானம் மற்றும் சொற்பொழிவு

திங்கட்கிழமை, ஜனவரி 5, 2026
காலை 6:30 மணி – காலை 8:30 மணி (IST)

பக்தி கீதங்கள் இசைத்தல் மற்றும் தியானம் அடங்கிய இந்த நிகழ்ச்சிக்குப் பின், ஒரு மெய்யான குருவின் வழிகாட்டுதலையும், ஆன்மாவிற்கு விடுதலை அளிக்கும் அவரது போதனைகளையும் பெறுவதால் கிடைக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்கள் குறித்து, YSS சந்நியாசி ஒருவரால் ஆங்கிலத்தில் எழுச்சியூட்டும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு, YSS ஆசிரமங்களும் மையங்களும், பக்தியுடனும் மரியாதையுடனும் நினைவுக் கூட்டங்களை நேரில் நடத்தின. உங்களுக்கு அருகிலுள்ள YSS மையத்தைக் கண்டறிய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

இந்த புனித நாள், வாழ்க்கையை மாற்றும் கிரியா யோக போதனைகளை இந்தியாவிற்கும் உலகிற்கும் வழங்கிய நமது அன்பிற்குரிய பரமஹம்ஸருக்கு, அவரது பக்தர்கள் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது.

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் செய்யலாம்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர