இறைவனிடம் அன்பு மற்றும் மனித குல சேவை ஆகிய உயரிய லட்சியங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையில் முழுமையாக வெளிப்பட்டன. கிழக்கையும் மேற்கையும் ஆன்மீக ரீதியாக ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், அனைத்து உள்ளங்களிலும் இறைவனுக்கான ஏக்கங்களை எழுப்பவும் அவர் இந்த பூமியில் அவதரித்தார். அவரது வழிமுறைகளில் அவர் நடைமுறைத்தன்மை கொண்டவராக இருந்தார்; அவரது போதனைகளும் வாழ்க்கையும் ஒரு உண்மையான இறைமனிதரின் ஞானத்தை வெளிப்படுத்தின. அவர் “ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம்” என்ற தத்துவத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றார்; நீடித்த மகிழ்ச்சியை அடைவதற்கு, எல்லையற்ற பரம்பொருளுடன் உணர்வுபூர்வமான ஆன்மத் தொடர்பு கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
— பரமஹம்ஸ யோகானந்தா: இன் மெமோரியம் புத்தகத்திலிருந்து
1893 ஆம் ஆண்டு கோரக்பூரில், ஒரு பக்தியுள்ள பெங்காலி குடும்பத்தில், முகுந்த லால் கோஷ் என்ற இயற்பெயருடன் பிறந்த யோகானந்தர், 1917 இல் யோகதா சத்சங்க சொஸைடியை (YSS) நிறுவியதன் மூலம் தனது வாழ்நாள் பணியைத் தொடங்கினார். அதன் நோக்கம், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புனித ஆன்மீக விஞ்ஞானமான கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை கிடைக்கச் செய்வதாகும்.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் கிரியா யோகப் போதனைகளை வழங்கிய நம் அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த ஆண்டு அவரது ஜன்மோத்ஸவத்தை இரண்டு சிறப்பு ஆன்லைன் நிகழ்வுகளுடன் நினைவு கூருகிறோம். உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இந்த புனித நாளில் பிற சாதகர்களுடன் தியானிப்பதன் மூலம் கிடைக்கும் சிறப்பு அருளாசிகளைப் பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஜன்மோத்ஸவ் 6 மணி நேர தியானம்
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4, 2026
காலை 9:40 மணி – மாலை 4:00 மணி (IST)
YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆறு மணி நேர சிறப்பு நினைவு கூரும் தியானம், ஜனவரி 4, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். ஆன்மீக ரீதியாக எழுச்சியூட்டும் இந்த நிகழ்வு, YSS ராஞ்சி ஆசிரமத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும், இதில் பக்திபூர்வ கீர்த்தனங்கள், அகத் தூண்டுதல் தரும் வாசிப்புகள் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெறும்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சியை ஜனவரி 6, செவ்வய்க்கிழமை இரவு 10 மணி வரை (IST) பார்க்க முடியும்.
ஜன்மோத்ஸவ் நினைவு தியானம் மற்றும் சொற்பொழிவு
திங்கட்கிழமை, ஜனவரி 5, 2026
காலை 6:30 மணி – காலை 8:30 மணி (IST)
இந்த நிகழ்ச்சியில், பிரபஞ்ச கீதம் இசைத்தல் மற்றும் தியானம் இடம்பெறும். அதைத் தொடர்ந்து, ஒரு உண்மையான குருவின் வழிகாட்டுதலையும் அவரது ஆன்ம-அனுபூதி போதனைகளையும் பெறுவதன் ஆன்மீக அருட்பேறுகள் குறித்து YSS சன்னியாசி ஒருவர் எழுச்சியூட்டும் சொற்பொழிவு வழங்குவார். இது ஆங்கிலத்தில் நடத்தப்படும்.
கவனிக்கவும்: இந்த நிகழ்ச்சியை ஜனவரி 16, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை (IST) பார்க்க முடியும்.
இந்தச் சந்தர்ப்பத்தில், YSS ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகள் பயபக்தியுடன் நேரடி நினைவுகூரும் நிகழ்ச்சிகளை நடத்தும். உங்களுக்கு அருகிலுள்ள ஒரு YSS மையத்தில் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
இந்த புனித நாள், வாழ்க்கையை மாற்றும் கிரியா யோக போதனைகளை இந்தியாவிற்கும் உலகிற்கும் வழங்கிய நமது அன்பிற்குரிய பரமஹம்ஸருக்கு, அவரது பக்தர்கள் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் செய்யலாம்.

















