ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர் அவதார தின

நினைவு ஆன்லைன் தியானம்

திங்கட்கிழமை, செப்டம்பர் 30, 2024

காலை 6:30

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

1861-ல் காசியின் எங்கோ ஒரு மூலையில், பொதுவாக சமூகத்திற்குத் தெரியாமலேயே ஒரு மகத்தான ஆன்மீக மறுமலர்ச்சி தொடங்கியது. மலர்களின் நறுமணத்தை எப்படி அடக்கிவிட முடியாதோ அதே போல் லாஹிரி மகாசயரும் ஒரு லட்சிய இல்லறத்தராக அமைதியான முறையில் வசித்து வந்தபோதிலும் அவருடைய இயல்பான புகழை மறைக்க முடியவில்லை. பாரதத்தின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் தேனீக்கள் போல் பக்தர்கள், முக்தியடைந்த மகானிடம் தெய்வீக அமிர்தத்தை நாட ஆரம்பித்தார்கள்…

ஒரு யோகியின் சுயசரித த்தில் பரமஹம்ஸ யோகானந்தர்

ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மஹாசயர் பரமஹம்ஸ யோகானந்தரின் பரமகுரு ஆவார், மேலும் அவர் யோகாவதாரம் அல்லது “யோகத்தின் அவதாரம்” என்று போற்றப்படுகிறார்.

கிரியா யோகப் பரவலைத் தொடங்க அவரது குருவான மகாவதார பாபாஜியால் லாஹிரி மகாசயர் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் பாபாஜி, பரமஹம்ஸ யோகானந்தரை அதை உலகெங்கும் கொண்டு செல்ல ஆசீர்வதித்தார். செப்டம்பர் 30, லாஹிரி மகாசயரின் அவிர்பவ் திவஸ் அல்லது அவதார தினத்தை குறிக்கிறது.

யோகவதார் ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயரின் வாழ்க்கையை அவரது அவதார தினத்தில் போற்றும் வகையில், செப்டம்பர் 30 அன்று சிறப்பு ஆன்லைன் நினைவு தியானம் YSS சன்னியாசி ஒருவரால் நடத்தப்பட்டது. இந்த நினைவு தியானம் ஒரு தொடக்க பிரார்த்தனை மற்றும் வாசிப்புடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து கீதம் பாடுதல் மற்றும் தியானம். பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயரின் அவதார தினத்தை கொண்டாடும் வகையில், YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் செப்டம்பர் 30 அன்று நேரில் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தின.

ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர் மற்றும் YSS குருமார்கள் பரம்பரைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த சந்தர்ப்பத்தில் வழக்கமான ஒரு பங்களிப்பை நீங்கள் செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர