YSS/SRF தலைவரின் இந்தியப் பயணம் — 2027
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவு 15 செப்டம்பர் 2026, செவ்வாய்க்கிழமை, காலை 11:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்.
நிகழ்ச்சியைப் பற்றி
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப் (YSS/SRF) அமைப்பின் மதிப்பிற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பதை அறிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரது வருகையின் போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நகரங்களில் சிறப்பு ஒருநாள் நிகழ்ச்சிகளை ஸ்வாமிஜி நடத்த உள்ளார்:
- ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 24: ஹைதராபாத்
- ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21: நொய்டா
வரவிருக்கும் ஸ்வாமிஜி அவர்களின் வருகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறோம். அவரது முந்தைய வருகைகளின்போது நம் அனைவருக்கும் கிடைத்த மகத்தான ஆன்மீக ஊக்கத்தையும், மனவெழுச்சியையும் நினைவுகூர்ந்து, அனைத்து YSS/SRF பக்தர்களையும் இந்த அருளார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
முந்தைய வருகைகளின் சிறப்பம்சங்கள்






ஸ்வாமிஜி அவர்களின் முந்தைய வருகைகளின்போது கிடைத்த இனிய நினைவுகளையும் அருளாசிகளையும் மீண்டும் நினைவுகூர்வதற்காக, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பார்வையிடுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்:
ஃபோட்டோ ஆல்பம்
முந்தைய நிகழ்ச்சிகள்
மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் அனுபவம்
ஸ்வாமிஜி அவர்கள் 2025 ஆம் ஆண்டு வருகை தந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பக்தர்களின் சில அனுபவங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
“[அகமதாபாத் நிகழ்ச்சி] என் வாழ்வில் இதுவரை நான் பெற்ற அனுபவங்களிலேயே மிகவும் மனநிறைவையும் நிம்மதியையும் அளித்த அனுபவமாக இருந்தது. தியானப்பயிற்சி செய்யவும், இறைப்பாடல்களைப் பாடவும், ஸ்வாமி சிதானந்தஜி அவர்களுடன் ஆனந்தமான சத்சங்கத்தில் பங்கேற்கவும் கிடைத்த வாய்ப்பை எனது பாக்கியமாக, நன்றியுடன் உணர்கிறேன்… அது என் இதயத்தை அன்பும் ஆனந்தமும் நிறைந்த பெருங்கடலால் நிரப்பியது… ஸ்வாமி சிதானந்தஜி அவர்களே, உங்கள் தெய்வீக இருப்பிற்காக நன்றி. அது எனது ஆன்மீகப் பயணத்தை இன்னும் ஆழமான நிலைக்கு உள் எடுத்துச் சென்றது.”
“நொய்டாவில் ஸ்வாமி சிதானந்தஜி அவர்கள் ‘ஆன்மிக ஒளிச்சேர்க்கை’ என்ற தலைப்பில் உரையாற்றிய தியான மண்டபத்தில் நிலவிய வலுவான ஆன்மீக அதிர்வுகளைத் தெளிவாக உணர முடிந்தது. அந்த உரை முடிவடையவே கூடாது என்று நாங்கள் விரும்பினோம்! அன்று அவர் கூறிய வார்த்தைகளின் ஆழத்தை முழுமையாக உள்வாங்க நம் அனைவருக்கும் பல ஆண்டுகள் தேவைப்படுமோ என்று நான் வியக்கிறேன்! அங்கே இருக்க முடிந்ததற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.”
“மதிப்பிற்குரிய ஸ்வாமி சிதானந்தஜி அவர்கள், சன்னியாசிகள் மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து சென்னையில் நடத்திய ஒருநாள் ஆன்மீக நிகழ்ச்சி, மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக இருந்தது…. மேலும், வேகமாக இயங்கும் நவீன உலகில் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ளும் ஓர் இளைஞருக்கு, குருதேவரின் கிரியா யோகப் போதனைகள் எவ்வாறு நிரந்தர ஆதரவு என்பது குறித்த ஸ்வாமி சிதானந்தஜியின் ஆழ்ந்த கருத்துகள், விலைமதிப்பற்ற நம்பிக்கையை அளித்தன. இந்த நிகழ்ச்சி குருதேவரிடமிருந்து கிடைத்த விலைமதிப்பற்ற அருளாசியாக என் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.”
“ஸ்வாமி சிதானந்தஜியின் ஒருநாள் நிகழ்ச்சி, என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் அனுபவமாக இருந்தது… மூன்று மணி நேர தியானத்தை நம்பமுடியாதவகையில் ஆழமாக அமைதியாக உணர்ந்தேன்…. என் சந்தேகங்கள் அனைத்தும் படிப்படியாகக் கரைந்து போவதைப் போல, அளவற்ற நிம்மதியும் நம்பிக்கையும் என் உள்ளத்தில் ஏற்பட்டதை உணர்ந்தேன். ஸ்வாமிஜி அவர்களின் வருகை ஒரு நிகழ்ச்சியைவிட மேலானதாக இருந்தது; அவருடைய வார்த்தைகள், அவருடைய இருப்பு, மற்றும் அக்கூட்டத்தின் ஒருமித்த சக்தி ஆகியவை என்றும் நிலைத்திருக்கும் ஓர் அனுபவம்.”
“குருதேவரும் YSS-ம் வலியுறுத்தும் அனைத்து கொள்கைகளும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டன — கருணை, ஒழுங்குமுறை, கனிவு, அமைதி போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். ஸ்வாமி சிதானந்தஜி அவர்களை நேரில் காணும் வாய்ப்பைத் தவிர, வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஒருபோதும் கற்பனை கூட செய்திராத சிறந்த பல நல்ல விஷயங்களுடன் நான் திரும்பிச் சென்றேன்.”
“என் குடும்பத்தினருடன் [பெங்களூரு] சத்சங்கத்தில் கலந்துகொண்டது, எங்களுடைய தனிப்பட்ட ஆன்ம அனுபூதிப் பாதைகளை வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நம்மிடையே உள்ள பொதுவான பிணைப்பையும் கூட ஆழப்படுத்தியது. ஆத்மார்த்தமான வார்த்தைகள், பகிர்ந்துகொண்ட மௌனமான தருணங்கள், மற்றும் சக பக்தர்களின் தளராத அர்ப்பணிப்பு ஆகியவை புதுப்பிக்கப்பட்ட வாழ்வின் நோக்கம் மற்றும் அக அமைதியால் எங்களை நிரப்பின. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய அனுபவம் எங்கள் ஆன்மாக்களைப் புதுப்பித்து, எங்கள் இதயங்களில் அழியாத தடத்தைப் பதித்துச் சென்றது — ஆன்மீகப் பயிற்சியின் நிலையான ஆற்றலுக்கும், அது நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டு வரும் ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான ஓர் அழியாத நினைவாகும்.”
“ஸ்வாமிஜியின் எளிமையும், குருதேவரின் தெய்வீக அன்பைப் பிரதிபலித்த அவரது இருப்பும்தான் அனைவராலும் மிகத் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. அவரது இருப்பு எனும் அருளாசிகளைப் பாக்கியமாகப் பெற்ற நாம் அனைவருமே இந்த அனுபவத்தை நேபாளத்திற்கு அளித்த நமது குருவின் ஒரு சிறப்பு ஆன்மீகப் பரிசாக எப்போதும் நம் நெஞ்சில் போற்றி வளர்ப்போம். ஜெய் குரு”
நிகழ்ச்சி விவரங்கள்
- ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 24: ஹைதராபாத்
- ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21: நொய்டா
ஸ்வாமி சிதானந்தஜி உடனான ஒவ்வொரு ஒருநாள் நிகழ்ச்சியிலும், காலையில் ஒரு நீண்ட தியானமும், மாலையில் ஒரு தியானமும் அதைத் தொடர்ந்து ஸ்வாமிஜியின் சத்சங்கமும் இடம்பெறும்.
ஸ்வாமிஜியின் வருகையின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
ஹைதராபாத்
முகவரி,
வியாஸ் நகர் ரோடு,
நர்சிங்கி,
ஹைதராபாத் – 500075
தெலுங்கானா
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
நொய்டா
யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — நொய்டா
பரமஹம்ஸ யோகானந்தா மார்க்
B-4, செக்டர் 62
நொய்டா – 201307
கௌதம் புத்த நகர்
உத்தரபிரதேசம்
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
பணம் செலுத்துதல்:
- பதிவுக் கட்டணம் ஒருவருக்கு ₹1200 ஆகும். இக் கட்டணம் உணவுக் கட்டணத்தையும் உள்ளடக்கியது.
- இருப்பினும், தங்குமிட வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் இருக்கும், அதாவது ஒவ்வொரு பக்தரும் தங்க விரும்பும் நாட்களின் எண்ணிக்கையையின் அடிப்படையில். தங்குமிடத்திற்கான கட்டண விவரங்கள் பின்வருமாறு:
- ஹைதராபாத்: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹ 1,000
- நொய்டா: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹ 1,250
- நொய்டா நிகழ்ச்சிக்காக தங்குமிட வசதி கோரும் பக்தர்களுக்கு, நொய்டா ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து வழங்கப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்: YSS நொய்டா ஆசிரமத்திற்குள் எந்தவிதமான தங்குமிட வசதியும் கிடையாது.
பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமம் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளவும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவு செப்டம்பர் 15, 2026 செவ்வாய்க்கிழமை, காலை 11:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்.
பதிவு தொடங்கியதும், பக்தர்கள் ஆன்லைன் YSS பக்தர் இணையதளம் மூலமாகவோ, YSS உதவி மையத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதன் மூலமாகவோ, அல்லது YSS ஆசிரமங்களில் ஏதேனும் ஒன்றிற்கு அல்லது ஹைதராபாத் தியான கேந்திரத்திற்கு நேரில் செல்வதன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
பக்தர் இணையதளம் மூலமாக ஆன்லைன் பதிவு:
விரைவாக எளிதாக பதிவு செய்ய, பக்தர்கள் YSS பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
YSS உதவி மையம் மூலம் பதிவு:
(0651) 6655 555 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பவும்:
- உங்கள் முழுப் பெயர்
- வயது
- முகவரி
- மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
- YSS பாடங்கள் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
- நீங்கள் வருகை தரத் திட்டமிட்டுள்ள தேதி மற்றும் புறப்படும் தேதி
உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் பேமெண்ட் லிங்க் மூலம் தொகையைச் செலுத்தலாம்.
SRF பக்தர்களுக்கான பதிவு:
- ஆர்வமுள்ள SRF பக்தர்கள், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி YSS உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- SRF பக்தர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே அவர்கள் உணவருந்தலாம். இருப்பினும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஹோட்டல்களில் தங்களுக்கான தங்குமிட வசதியை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கவனத்திற்கு:
- YSS/SRF பக்தர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
- 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- பல்வேறு இடங்களிலும் தங்குமிட வசதிகள் குறைவாக உள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், தங்குமிடம் வேண்டும் பதிவுகள், உறுதிசெய்யப்படும்.
- இரு இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.
ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெறும் ஒருநாள் நிகழ்ச்சிகளுக்கு, பக்தர்கள் நிகழ்ச்சி நடைபெறும் முந்தைய நாள் மாலை வந்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் காலை வரை தங்கிக்கொள்ளலாம். தங்குமிட வசதியைப் பயன்படுத்த விரும்பினால், பக்தர் தங்க விரும்பும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் கட்டணம் இருக்கும். தங்குமிடக் கட்டணங்கள் பின்வருமாறு:
- ஹைதராபாத்: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹1,000
- நொய்டா: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹1,250
நொய்டா நிகழ்ச்சிக்காக தங்குமிட வசதி கோரும் பக்தர்களுக்கு, நொய்டா ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்குமிட வசதி ஏற்பாடு செய்து வழங்கப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்: YSS நொய்டா ஆசிரமத்திற்குள் எந்தவிதமான தங்குமிட வசதியும் கிடையாது.
கவனிக்கவும்:
- இரு இடங்களிலும் தங்குமிட வசதிகள் குறைவாக உள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்குமிடம் கோரும் பதிவுகள் உறுதிசெய்யப்படும்.
- பகிரக்கூடிய தங்குமிட வசதி, பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தனித்தனியாகப் வழங்கப்படும். எனவே, குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்பத் திட்டமிட்டுத் தங்கள் உடைமைகளை கொண்டுவரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- தங்குமிடம் அல்லது உணவுமுறையில் சிறப்பான தேவை உள்ள பக்தர்கள், அதற்கான ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் இங்கே உள்ளது.
வழக்கம்போல, பதிவு மேசை, தங்குமிட ஏற்பாடுகள், ஒலி-ஒளி வசதிகள், உணவு பரிமாறுதல், தூய்மைப் பணிகள், வழிகாட்டுதல் மற்றும் பிற பணிப்பிரிவுகளில் சேவை செய்வதற்கு பக்தர்-தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றில் சில பணிப்பிரிவுகளுக்கு, ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே தன்னார்வலர்கள் தேவைப்படலாம். நீங்கள் தன்னார்வலராக சேவை செய்ய விரும்பினால், பதிவுப் படிவத்தில் அதைக் குறிப்பிடவும்.
பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்
யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — ராஞ்சி
பரமம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி – 834001
ஜார்கண்ட்
தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, 9:00 a.m. – 4:30 p.m.)
ஈமெயில்: [email protected]

















