வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பருவத்தில், உன்னதமான பக்தி நுழைவாயிலைத் திறந்து வையுங்கள், இதனால் கிறிஸ்துவின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மை உங்கள் உணர்வுநிலைக்குள் புதிதாக வர முடியும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு பொன்னான நொடியும், கிறிஸ்து உங்கள் அறியாமையின் இருண்ட வாயில்களைத் தட்டிக் கொண்டே இருக்கிறார். இப்போது, இந்த அற்புத புனித விடியலில், கிறிஸ்து குறிப்பாக உங்கள் அகத்தேடலுக்கு பதிலளிக்கும் விதமாக, உங்களில் வியாபித்திருக்கும் அவரது கிறிஸ்து உணர்வுநிலையை எழுப்புவதற்காக வருகிறார்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
கிறிஸ்துமஸ் இன் இந்த புனித தருணத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் விதமாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசி ஒருவர் ஆங்கிலத்தில் ஒரு சிறப்பு நினைவு தியானம் நடத்தினார். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பக்தி பூர்வ கீதமிசைத்தல், வாசிப்பு, தியானம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தியும் அதைத் தொடர்ந்த நிறைவு பிரார்த்தனையுடனும் நிறைவடைந்தது.
YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் செய்தி
YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியைப் படிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
இந்த சந்தர்ப்பத்தில் YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளை நேரில் நடத்தின.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் பங்களிப்பை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்.