மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்

நினைவு தியானம்

வெள்ளிக்கிழமை, ஜூலை 25

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

இறைவனை அறிவதற்கு வேண்டிய விஞ்ஞான உத்தியான கிரியா யோகம், கடைசியாக எல்லா நாடுகளிலும் பரவும், மேலும் மனிதனின் தனிப்பட்ட, எல்லை கடந்த இறை ஞானத்தின் மூலமாக தேசங்களை இணக்கமாக்க உதவும்.

— மகாவதார பாபாஜி, ஒரு யோகியின் சுயசரிதம் இலிருந்து

1920-ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், உலகெங்கிலும் கிரியா யோக போதனைகளைப் பரப்புவதற்கான தமது பணிக்குத் தெய்வீக உறுதியளிக்கும் பொருட்டு, மகாவதார் பாபாஜி குருதேவரின் கொல்கத்தாவில் உள்ள கர்பார் சாலை இல்லத்திற்கு விஜயம் செய்தார். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பக்தர்கள், மகாவதார் பாபாஜி பரமஹம்ஸ யோகானந்தரைச் சந்தித்த இந்தச் சந்திப்பு தினத்தை மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸாக நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த புனித நாளைச் சிறப்பிக்கும் வகையில், மகாவதார பாபாஜியைப் போற்றும் விதமாக ஒரு சிறப்பு ஆன்லைன் தியானம் YSS சன்னியாசி ஒருவரால் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி YSS நொய்டா ஆசிரமத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, மேலும் கீதம் இசைத்தல், அகத் தூண்டுதல் தரும் வாசிப்புகள் மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன.

இந்த புனித தினத்தில், YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளிலும் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்தப் புனித தினத்தில் காணிக்கை செலுத்த உங்களுக்கு அகத் தூண்டுதல் ஏற்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனைப் பயன்படுத்தவும். உங்கள் தாராள மனப்பான்மைக்கு மனப்பூர்வமாக நன்றி கூறுகிறோம், YSS குரு பரம்பரை மூலம் கிடைக்கப்பெறும் பற்பல அருளாசிகளுக்கான மனமார்ந்த நன்றியின் வெளிப்பாடாக இதைக் கருதுகிறோம்.

மேலும் அறிய நீங்கள் பின்வரும் இணைப்புகளை பார்க்க விரும்பலாம்:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர