இளம் நெஞ்சங்களில் இறை அன்பை வளர்த்தல்
இமயமலை அடிவாரத்தில் நடத்தவுள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான புதிய அகில இந்திய கோடைக்கால முகாமை அறிவிப்பதில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) மகிழ்ச்சி அடைகிறது.
இடம்: சூலினி பல்கலைக்கழகம், சோலன், இமாச்சலப் பிரதேசம்
தேதிகள்: மே 31 முதல் ஜூன் 6, 2026 வரை (ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை).
12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இதில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள்.
முக்கியத் தகவல்
- மே 30, சனிக்கிழமை மதியத்திற்குள் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதையும், ஜூன் 6, சனிக்கிழமை அன்று மாலை அவர்கள் அங்கிருந்து புறப்படலாம் என்பதையும் பெற்றோர் தங்கள் காலண்டரில் குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- அனைத்து வகுப்புகளும் தியானங்களும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.
- இம்முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி மாத இறுதியில் திறக்கப்படும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 108 சிறுவர்கள் மற்றும் 108 சிறுமியர் என மொத்தம் 216 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
- விண்ணப்பிப்பதற்கான லிங்க்-கிற்கு, பிப்ரவரி மாத இறுதியில் இதே பக்கத்தைப் பார்க்கவும்.
முகாமைப் பற்றி
இது ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி வாழ்வது என்ற போதனைகளை அடிப்படையாகக் கொண்டது; இது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமச்சீரான வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இது YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலின் கீழும், அனுபவம் வாய்ந்த இல்லறச் சீடர்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் ஆதரவுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் மற்றும் வளாகத்தின் சிறப்பம்சங்கள்
- இந்த முகாம் இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூலினி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.
- இந்த முகாமிற்கு இந்தியாவின் மிகச்சிறந்த, ஆராய்ச்சி சார்ந்த தனியார் பல்கலைக்கழகமான சூலினி பல்கலைக்கழகம் முழு ஆதரவை வழங்குகிறது.
- விடுதி அறைகள், வகுப்பறைகள், உணவு வசதிகள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் கலையரங்கங்கள் போன்ற அதிநவீன வளாக வசதிகள் YSS முகாமிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான முகாம்கள் ஒரே வளாகத்திற்குள் ஒரே வாரத்தில் ஆனால் தனித்தனியாக நடத்தப்படும். இது ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியைக் கொண்டுள்ள குடும்பங்கள், இருவரையும் ஒரே நேரத்தில் முகாமிற்கு அனுப்ப வழிவகை செய்யும்.
- முகாமின் போது, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் ஒரே வயதுப் பிரிவினருடன் ஆன்மீக நண்பர்களின் சமூகமாக, அக்கறையுள்ள பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இணைந்து இருப்பார்கள்.
தினசரி நிகழ்ச்சி
முகாமின் ஒரு நாள் என்பது பொதுவாக, பல்வேறு விதமான செயல்பாடுகளால் நிறைந்து குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் வேடிக்கையான முறையில் இருக்கும் அதேசமயம் அவர்களுக்குள்ளே ஒழுக்கத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்கும்:
- தினசரி கூட்டுத் தியானங்கள்
- எப்படி வாழ்வது வகுப்புகள் இச்சா சக்தி, நட்பு மற்றும் அச்சமின்மை போன்ற தலைப்புகளில் அமையும்
- சன்னியாசிகள் வழிநடத்தும் சத்சங்கங்கள் மற்றும் தியான உத்தி மறு ஆய்வு வகுப்புகள்
- விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்
- கீதை சுலோகங்கள் இசைத்தல்
- கீர்த்தனை
- திரைப்பட இரவு
- கலை மற்றும் கைவினைத் திட்டங்கள்
- இயற்கை சூழலில் மலையேறுதல்
- ஆன்மீக மேளா
- கலாச்சார மாலை நேர நிகழ்ச்சி
- குழு விவாதங்கள் மற்றும் தம் பாகங்களை நடித்தல்
பெற்றோரின் கருத்துரைகள்
கடந்த காலங்களில் நடைபெற்ற YSS குழந்தைகள் முகாம்களைப் பற்றிப் பெற்றோர்கள் பகிர்ந்துகொண்ட சில கருத்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
“இந்த எப்படி வாழ்வது - சிறுமியர் முகாம், விளையாட்டு மற்றும் கற்றல் ஆகியவற்றின் மிகச்சரியான கலவையாக அமைந்தது; இது குழந்தைகள் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகத்துடன் ரசிப்பதோடு குருஜியின் போதனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகை செய்தது. இந்த முகாம் குழந்தைகளின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தும் சூழலை வழங்கியதால், குழந்தைகள் மிகுந்த உத்வேகத்துடனும், ஆர்வத்துடனும் அடுத்த ஆண்டு நிகழ்ச்சிக்காக இப்போதே காத்திருக்கிறார்கள்.”
“இந்தக் கோடைகால முகாம் எங்கள் குழந்தைகளுக்கு ஓர் அர்த்தமுள்ள மற்றும் வெற்றிகரமான அனுபவமாக அமைந்தது. அங்கிருந்த சூழல் வேடிக்கையாகவும், ஈடுபடச் செய்வதாகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியில் மேம்பட்டதாகவும், நமது பண்புநெறிகளிலும் பாரம்பரியத்திலும் ஆழமாக வேரூன்றியதாக இருந்தது. குழந்தைகள் அன்போடும் அக்கறையோடும் வழிநடத்தப்பட்டனர்; மேலும் இறை அருள், உற்சாகம் மற்றும் பக்தியால் அவர்கள் உத்வேகம் அளிக்கப்பட்டனர். அங்கிருந்த அந்த அழகான தருணங்களுக்காக என் குழந்தை இப்போதே ஏங்கத் தொடங்கிவிட்டது.”
அடுத்த படிநிலைகள்
- உங்கள் குழந்தை அல்லது பதின்ம வயதினர் இந்த முகாமில் பங்கேற்க எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் பிப்ரவரி இரண்டாம் பாதியில் வழங்கப்படும். மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான லிங்கிற்கு தயவுசெய்து இந்தப் பக்கத்தை மீண்டும் பார்க்கவும்.
- சில பெற்றோர்கள் முகாம் நடைபெறும் காலத்தில் டெல்லி, நொய்டா, சண்டிகர், சிம்லா, சோலன் அல்லது அருகிலுள்ள இடங்களுக்கு தனிப்பட்ட ஏகாந்தவாசம், புனிதப் பயணம் அல்லது விடுமுறைச் சுற்றுலாவிற்குத் திட்டமிட விரும்பலாம்.
யோகதா குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர், இந்தத் தனித்துவமான மற்றும் செறிவூட்டும் YSS முகாமில் பங்கேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் அவர்கள் ஆன்மீக நட்புகள், வேடிக்கை செயல்பாடுகள், சுய ஒழுக்கம் மற்றும் வகுப்புகள் ஆகியவற்றால் பயனடைவதோடு, கடவுளுடனான தங்களது தனிப்பட்ட உறவை மீண்டும் விழிப்படையச் செய்வார்கள்.




















