2025 செப்டம்பர் 1 அன்று, YSS சன்னியாசிகள் ஸ்வாமி ஈஸ்வரானந்த கிரி மற்றும் ஸ்வாமி தைரியானந்த கிரி ஆகியோர் டேராடூனில் உத்தராகண்ட் முதல்வர் ஸ்ரீ புஷ்கர் சிங் தாமி அவர்களைச் சந்தித்து, மாநிலத்தின் தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் விதமாக, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
முதலமைச்சர், YSS சன்னியாசிகளை அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு சால்வைகள் அணிவித்து கௌரவித்தார். மேலும் மாநிலத்தின் தற்போதைய நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு YSS சரியான நேரத்தில் அளித்த ஆதரவிற்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஸ்வாமி ஈஸ்வரானந்தா, YSS நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக பாரம்பரிய செல்வத்திலிருந்து புத்தகங்களை ஸ்ரீ தாமிக்கு வழங்கினார்.
YSS சன்னியாசிகள் உத்தரகாண்ட் முதல்வர் ஸ்ரீ புஷ்கர் சிங் தாமியை சந்தித்தனர்
இந்த நன்கொடை பரமஹம்ஸ யோகானந்தரின் இலட்சியத்திற்கான YSS-இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது: “மற்றவர்களுக்கு ஆன்மீக, மன மற்றும் லெளகீக ரீதியாக சேவை செய்வதால், உங்களுடைய சொந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதைக் காணலாம். மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் நீங்கள் தன்னையே மறக்கும் பொழுது, நீங்கள் நாடாமலேயே உங்கள் மகிழ்ச்சிக் கோப்பை நிரம்பி விடுவதைக் காண்பீர்கள்.”
இந்த லட்சியத்தால் வழிநடத்தப்பட்டு, இந்த அமைப்பு, அதன் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் வாயிலாக இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிகிறது.
YSS நிவாரணப் பணிகளுக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால், கீழே பகிரப்பட்டுள்ள இணைப்பைப் பார்வையிடவும்:



















