யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — நொய்டா
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – நொய்டா ஜனவரி 2010 ல், முதல் கட்ட கட்டுமான நிறைவிற்கு பின் திறக்கப்பட்டது. டெல்லி-உ.பி எல்லையிலிருந்து வெறும் நாலு கிலோ மீட்டர் தொலைவிலே உள்ள ஐந்து ஏக்கர் நிலப் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், ஒரு நிர்வாகக் கட்டிடத்தொகுப்பையும் இரண்டு ஏகாந்த வாச கட்டிடத் தொகுப்புகளையும் கொண்டுள்ளது. நிர்வாகக் கட்டிடத் தொகுப்பு, ஒரு முழு நிலவறைப் பகுதி கொண்ட மூன்று மாடி கட்டிடமாகும். இது ஒரு தியானைக் கூடம், வரவேற்பறை, புத்தக விற்பனை மற்றும் நூல் நிலையம், ஆலோசனை வழங்கும் அறைகள், சமையல் மற்றும் உணவருந்தும் அறைகள், அலுவலகங்கள், சன்னியாசிகளுக்கான அறைகள் மற்றும் தேசிய தலைநகர் பகுதி ஊடே பிரயாணம் செய்யும் பக்தர்களுக்கு மூன்று நாட்கள் வரை முன்பதிவுடன் தங்குவதற்கான அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் வழிநடத்தப்படும் ஆன்மீக சாதனாவைக் கருத்தில் கொண்டு, ஆடவருக்கும் மகளிருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ள ஒருவர்-தங்கும் முப்பது அறைகளைக் கொண்டுள்ள இரண்டு ஏகாந்தவாசக் கட்டிடத் தொகுப்புகள் இந்த ஆசிரமத்தின் சிறப்பு அம்சம் ஆகும். பக்தர்கள் இங்கே வந்து 3-5 நாட்கள் வரை தங்கி, மௌனம், படிப்பு மற்றும் சாதனாவுடன் கூடிய ஏகாந்த வாசத்தை அனுபவிக்கவும், ஆசிரமத்தில் தங்கியுள்ள சன்னியாசிகளின் ஆலோசனை பெற்றுப் பயனடையவும் அன்புடன் அழைக்கப் படுகின்றனர். இத்துடன் கூட சன்னியாசிகளால் பெரும்பாலும் வார இறுதியில் வழிநடத்தப்படும் வழக்கமான சாதனா வகுப்புகளும் உண்டு. இவை 3-5 நாட்கள் வரை நீடிக்கலாம் மற்றும் இவை நமது தெய்வீகக் குருதேவரின் போதனைகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிட்ட தலைப்புகள், எப்படி-வாழ-வேண்டும் கோட்பாடுகள் மேலும் ஒருமுகப்பாடு மற்றும் தியான உத்திகளின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் முன்பதிவுகள் தேவை.
சிறிய சங்கம், பெரிய சங்கம் ஆகிய இரண்டுமே கூட ஆசிரமத்தில் நடத்தப்படுகின்றன.
வாராந்திரிய நிகழச்சிகள்
கூட்டுத் தியானம்
நாங்கள் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம், அவற்றில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இந்த அமர்வுகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக இசைத்தல் மற்றும் உத்வேகம் அளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
வியாழக்கிழமை
மற்ற நாட்களில்
சிறுவர்கள் சத்சங்கம்
இந்த அமர்வுகளில், 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கதைசொல்லல், சுருக்கமான வழிநடத்தப்பட்ட தியானங்கள் மற்றும் பிற கலந்துரையாடல் வழி கற்றல் முறைகள் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் YSS போதனைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். மேலும் அறிந்து கொள்ள.
ஞாயிற்றுக்கிழமை
வரவிருக்கும் சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்
ரிட்ரீட் (இந்தி)
ஜூலை 17, வெள்ளிக்கிழமை – ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை
மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்
ஜூலை 25, சனிக்கிழமை
நினைவுதின நீண்ட தியானம்
ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை
குரு பூர்ணிமா
ஜூலை 29, புதன்கிழமை
YSS ஆசிரமங்களில் SRF உலகப் பேரவை திரையிடல்
ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை – ஆகஸ்ட் 8, சனிக்கிழமை
மாதாந்திர நீண்ட தியானம்
ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை
உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்
YSS மற்றும் SRF பாட மாணவர்கள் ஐந்து நாட்கள் வரை ஆசிரமத்தில் தங்க வரவேற்கப்படுகிறார்கள். தனிப்பட்ட ஏகாந்தவாசத்திலோ அல்லது ஒரு வழிகாட்டப்பட்ட ஏகாந்தவாசத்திலோ உத்வேகமுற்று புத்துணர்ச்சி பெற எங்களுடன் சேருமாறு பக்தர்களை ஊக்குவிக்கிறோம். இந்த ஏகாந்தவசங்களின் போது, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை YSS சன்னியாசிகள் நடத்தும் கூட்டு தியானங்களில் பங்கேற்கலாம், மேலும் யோகதா சத்சங்க போதனைகளின் ஆய்வு மற்றும் பயிற்சியில் ஆன்மீக ஆலோசனையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.
ஆசிரமத்தில் தங்குமிட வசதி கோர கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

















